Thursday 23 February, 2012

மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்: 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம்


விருதுநகர்: ஐந்து மணி நேரம் சூரிய ஒளியை பெற்று, அதன் மூலம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், சோலார் மின் சக்தி சைக்கிளை, விருதுநகர் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.


விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், மெக்கானிக் துறை இறுதியாண்டு மாணவர்கள் எம்.நாகராஜன், பி.கோட்டைராஜன், டி.நாகமூர்த்தி, எஸ்.கருப்பசாமி, டி. கருப்பசாமி, கே. கருப்பசாமி ஒன்றிணைந்து, சோலார் மின் சக்தி சைக்கிள் வடிவமைத்துள்ளனர். சூரிய வெப்பத்தை சோலார் பேனல் மூலம் சேகரித்து, அதை மின் சக்தியாக மாற்றி, பேட்டரியில் சேமித்து,மோட்டார் மூலம் இயங்கும் சைக்கிளை உருவாக்கி உள்ளனர் .


30 வாட்ஸ் பவர் சைக்கிளுடன் கூடிய சோலார் பேனலை, சூரிய ஒளியில் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், தினம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம். வெயிலில் ஓட்டி சென்றால், அது மேலும் மின்சக்தியை சேகரித்து கொள்ளும். மின்சக்தி குறைந்து விட்டால், பெடலாலும் சைக்கிளை ஓட்டி கொள்ளலாம்.


மாணவர் எம். நாகராஜன் கூறுகையில்,""புராஜக்ட் ஓர்க்கிற்காக அனைவரும் சேர்ந்து,இந்த சைக்கிளை தயார் செய்தோம்.பெட்ரோல் விலையேற்றத்தால், சிரமப்படுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை உருவாக்க ரூ.15 ஆயிரம் செலவு ஆகும்,'' என்றார். தகவலுக்கு, 87541 94958 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Wednesday 22 February, 2012

சென்னை-மாவட்டங்களில் மின்தடை செய்யும் நேரம் எது.. பட்டியல் போடும் மின்வாரிய அதிகாரிகள்


சென்னை: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் எந்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்தலாம் என்பது குறித்து பட்டியல் போடப்பட்டு வருகிறதாம். இது முடிந்தவுடன் அரசின் ஒப்புதல் பெற்று அது அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் வரலாறு காணாத மின்பற்றாக்குறையும், மின்வெட்டும் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. அம்மிக்கல்லை நோக்கி மக்களை கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை மக்கள் காட்சிப் பொருளாக வேடிக்கை பார்க்கும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர்.

தலைநகர் சென்னையில் தற்போது ஒரு மணி நேர மின்தடையே அமலில் உள்ளது. அதேசமயம், சென்னை தவிர்த்த பிற தமிழகப் பகுதிகளில் பல மணி நேர மின் தடை மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த நிலையில் சென்னைக்கு மட்டும் ஒரு மணி நேரம்தானா என்று மற்ற மாவட்ட மக்கள் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கும் மின்தடையை கூடுதலாக்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சென்னைக்கான மின்வெட்டை 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிற மாவட்டங்களில் 6 மணி நேரமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக ஒரு நாள் மின் விடுமுறையை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் எந்த நேரத்தில் மின்தடையை அமல்படுத்தலாம் என்பது குறித்த பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மின்தடை நேரம் விரைவில் விரிவாக அறிவிக்கப்படும்.

சென்னையில் பகலில் 2 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்தடை இருக்கும் என்று தெரிகிறது. அதேசமயம், பிற மாவட்டங்களில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் இந்த மின் தடை இருக்கலாம்.

Saturday 18 February, 2012

சாலையில் திரியும் மனநோயாளிகள்


சாலையில் திரியும் மனநோயாளிகள்

-நமது நிருபர்-First Published : 15 Feb 2012 04:11:27 PM IST

சிதம்பரம், பிப்.14: கோயில் நகரமும், சுற்றுலா நகரமான சிதம்பரம் நகரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் செயல்களால் சிதம்பரம் நகர மக்கள் வேதனைக்குள்ளாகி வருகிறார்கள்.
÷சிதம்பரம் நகரில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இரவும், பகலும் சுகாதார சீர்கேட்டுடன் சுற்றித்திரிந்து வருகின்றனர். இவர்களது செயல்கள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.
÷அண்மையில் பள்ளிப்படையைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 20 வயது இளைஞர் மேலர வீதியில் பைக்கில் வந்த பொறியியல் புல மாணவி ஒருவரை கீழே தள்ளி கலாட்டா செய்துள்ளார். இதனால் அந்த மாணவி காயமும், அதிர்ச்சியுமுற்றார். அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் சிறிது நேரம் கழித்து அந்த இளைஞரை காவல் துறையினர் அனுப்பி விட்டனர்.
÷அதுபோன்று உடம்பில் அரைகுறை துணியுடன் சுமார் 22 வயதுள்ள இளம்பெண் இரவில் சுற்றித் திரிந்து வருகிறார். இதனால் அந்த மனநிலை பாதித்த பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மனநிலை பாதித்தவர்கள் சிலர், இரவு நேரத்தில் வீட்டு வாசலில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு சென்று விடுகின்றனர்.
÷மேலும், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுவது, உடல் அங்கத்தை காட்டுவது போன்ற முகம் சுளிக்கும் செயலில் ஈடுபடுவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் கிடக்கும் துண்டு சிகரெட் மற்றும் பீடிகளை எடுத்து புகைப்பது, அதிகாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வோர் மீது கல்வீசுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபடுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
÷எனவே நகராட்சி நிர்வாகமும், காவல் துறை நிர்வாகமும் இணைந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து, மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ





Saturday 3 April, 2010

தமிழ் நெஞ்சங்கள்

இது என்னுடைய புதிய வலைப் பகுதி உங்கள் அனைவரையும் நான் வரவேற்க் கி றேன்